விளையாட்டு

இந்திய அணிக்கு தங்கம் கிடைக்காமல் போனதற்கு இதுதான் காரணம்! - சர்வதேச செஸ் பயிற்சியாளர்

webteam

செஸ் ஒலிம்பியாட் தொடரின் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் நிகால் சரின் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். இந்திய வீரர் அர்ஜுன் எரிகாசி தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். மேலும் தமிழக வீரர் குகேஷ் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மற்றொரு தமிழக நட்சத்திர வீரர் பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். மகளிர் பிரிவில் வைஷாலி, தானிய சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.

இறுதிச் சுற்றுகளில் இந்திய அணி செய்த சிறு சிறு தவறுகளே தங்கப்பதக்கம் கிடைக்காமல் போக காரணமாகி விட்டது என சர்வதேச செஸ் பயிற்சியாளர் எபனேசர் ஜோசப் புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்தார். மேலும் இம்முறை பலரது கவனம் நமது வீரர்கள் பக்கம் திரும்பியது அவர்களுக்கு கொஞ்சம் அழுத்தத்தை தந்ததும் மற்றொரு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் அளித்த முழு பேட்டி இதோ: