விளையாட்டு

விடாது கொட்டும் மழை : இந்தியா - இலங்கை 3வது நாள் கிரிக்கெட் போட்டி நிறுத்தம்

EllusamyKarthik

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் கொழும்பு நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த தீர்மானித்தது. இந்திய அணி சார்பில் ஷிகர் தவான், பிரித்வி ஷா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகள் விளாசி அதிரடி காட்டிய தவான் 13 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

பின்னர், பிரித்வி ஷா உடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பவுண்டரிகளாக அடித்தனர். அதனால், இந்திய அணியின் ஸ்கோர் 6 ரன் ரேட் என்ற அளவிலேயே சென்றது. இருப்பினும், பிரித்வி ஷா 49, சாம்சன் 46 ரன்களில் ஆட்டமிழந்து இருவரும் அரைசதத்தை தவறவிட்டனர்.

23 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை இந்தியா எடுத்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சூர்ய குமார் யாதவ் 22(17), மணிஷ் பாண்டே 10 (15) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இந்தியா 2 - 0 என கைபற்றியுள்ளது. தற்போது மூன்றாவது போட்டியில் இரு அணிகளும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.