விளையாட்டு

மிதாலிக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை

webteam

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய இந்திய அணிக் கேப்டன் மிதாலி ராஜ்க்கு ஒரு கோடி ரூபாயும், வீட்டு மனையும் பரிசாக வழங்கப்படும் என தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. 

அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், கேப்டன் மிதாலி‌ ராஜை நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பதாகவும், இறுதிப்போட்டியில் போராடி வெற்றி வாய்ப்பை இழந்ததாகவும் சந்திரசேகர ராவ் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய தெலுங்கானா முதல்வர், இந்திய அணிக் கேப்டன் மிதாலி ராஜ்க்கு ஒரு கோடி ரூபாயும், வீட்டு மனையும் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தார். முன்னதாக, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய மிதாலி ராஜ் உள்ளிட்ட வீராங்கனைகள் 10பேருக்கு ரயில்வே துறை சார்பில் தலா 13 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தது குறிப்பிடதக்கது.