சென்னை அணி
சென்னை அணி twitter page
T20

5வது முறையாக சாம்பியன்: சென்னை வந்த CSK வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

PT WEB

நடப்பு ஐபிஎல் சீசன் இறுதிப்போட்டி கடந்த 28ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதில் குஜராத் அணியும் சென்னை அணியும் மோத இருந்தது. இந்த நிலையில் அன்று பெய்த தொடர் மழையால், போட்டி அடுத்த நாளுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே நேற்று அகமதாபாத்தில் இறுதிப் போட்டி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 214 ரன்கள் எடுத்தது. பின்னர், சென்னை அணி பேட் செய்யத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மழை பெய்யத் தொடங்கியது. இதனால் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் 12.10 மணிக்கு தொடங்கிய போட்டியின்போது சென்னை அணி 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதை விரட்டிப்பிடித்த சென்னை அணி 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த வெற்றியை சென்னை ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், சாம்பியன் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி வீரர்கள் இன்று பிற்பகல் சென்னை வந்தடைந்தனர். சென்னை அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் வெற்றி கோப்பையுடன் சென்னை விமானநிலையம் வந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.