விளையாட்டு

"ரசிகர்கள் இல்லாத மைதானங்கள் பூக்களில்லா தோட்டங்கள்"-ரொனால்டோ !

jagadeesh

ரசிகர்கள் இல்லாத மைதானங்கள் பூக்களில்லா தோட்டங்களைப் போன்று இருப்பதாக நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

உலகின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகளவில் லியோனல் மெஸ்ஸிக்கு எந்தளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்தளவுக்கு ரொனால்டோவுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். இப்போது ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அப்போது பேட்டியளித்த ரொனால்டோ தனது ரசிகர்கள் ஆரவாரம் மட்டுமல்லாமல் எதிரணி ஆதரவாளர்களின் கேலி, கிண்டல்களும் தன்னை உத்வேகப்படுத்துமென அவர் கூறியுள்ளார். கால்பந்து மைதானங்களில் விரைவில் ரசிகர்களை காணலாம் எனவும் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். ஸ்வீடனுக்கு எதிரான போட்டியில், ரொனால்டோ 2 கோல்கள் அடித்ததால் அவரின் சர்வதேச கோல் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.