விளையாட்டு

முதல் இன்னிங்ஸில் 135 ரன்களுக்கு சுருண்டது இலங்கை அணி

webteam

இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஃபாலோ ஆன் பெற்றது.

இலங்கை கண்டியில் நடைபெறும் போட்டியில் இரண்டாவது நாளான இன்று இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 487 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 86 பந்துகளில் தமது முதல் சதத்தை பதிவு செய்தார். 108 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார். 

பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முஹமது ஷமி, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் 352 ரன்கள் பின்தங்கிய இலங்கை அணி ஃபாலோ ஆன் பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இலங்கை இன்றைய ஆட்ட நேர இறுதியில் 1 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் எடுத்துள்ளது. நாளை 2-வது இன்னிங்ஸை இலங்கை தொடர்ந்து விளையாட உள்ளது.