விளையாட்டு

ஏகப்பட்ட மாற்றங்களுடன் இலங்கையை சந்திக்கும் இந்தியா: ஆடும் 'லெவன்' அறிவிப்பு

JustinDurai

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடக்கிறது.

7 மணிக்கு தொடங்கவுள்ள இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை  அணி பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது. இதையடுத்து இந்திய அணி முதலில் பந்துவீச தயாராகி வருகிறது. இலங்கையை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. இந்திய அணியில் இன்றையப் போட்டியில் ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அவேஷ் கான், முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி: ரோகித் சர்மா, வெங்கடேஷ் ஐயர். ஸ்ரேயாஸ் ஐயர். சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், குல்தீப் யாதவ், அவேஷ் கான், ரவி பிஷ்னோய்.