விளையாட்டு

இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டி : இந்தியா பேட்டிங்

webteam

இலங்கைக்கு எதிரான 3 வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதையடுத்து இரண்டாவது போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து இன்று 7 மணிக்கு 3வது டி20 போட்டி புனேவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இலங்கை அணியும், கடைசி போட்டியையும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் இலங்கை அணி இன்று நடைபெறும் போட்டியில் எழுச்சி பெறுமா என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் லசித் மலிங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.