விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுத்தாம்டனுக்கு மாற்றம்: ஐசிசி அறிவிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுத்தாம்டனுக்கு மாற்றம்: ஐசிசி அறிவிப்பு

jagadeesh

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் இருந்து சவுத்தாம்டனுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜூன் மாதம் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் லண்டன் நகரின் புகழ்ப்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக இப்போது அதில் மாற்றம் நிகழ்ந்தள்ளது. இது குறித்து அண்மையில் 'இந்தியா டுடே'வுக்கு பேட்டியளித்துள்ளார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி. அதில் போட்டி சவுத்தாம்டனுக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஐசிசி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இங்கிலாந்து அரசு அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தினால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரசிகர்கள் போட்டியை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.சி.சி.யின் பொதுமேலாளர் ஜெப் ஆல்ட்ரைஸ் கூறுகையில், “ஹேம்ஷையர் பவுலில் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப் போட்டியைச் சிறப்பாக நடத்துவோம் என நம்புகிறேன். விளையாடும் வீரர்களும், பார்வையாளர்களும் பாதுகாப்பாக, நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டும். இரு சிறந்த அணிகள் டெஸ்ட் இறுதிப் போட்டியில் விளையாடுவதை ரசிகர்கள் பார்த்து மகிழக் குறைவான அளவில் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.