விளையாட்டு

CSK vs DC : ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்றில் மோதும் சீனியர் vs ஜூனியர் கேப்டன்கள்!

EllusamyKarthik

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்ற ஐபிஎல் 2021 சீசனின் முதல் பிளே-ஆஃப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் சென்னையை தோனியும், டெல்லிய ரிஷப் பண்டும் வழிநடத்துகின்றனர். 

இதன் மூலம் 24 வயதான டெல்லி கேப்டன் பண்ட், ஐபிஎல் பிளே-ஆஃப் போட்டியில் ஒரு அணியை வழிநடத்தும் இளம் கேப்டனாகி உள்ளார். அதே போல டிராவிட்டுக்கு பிறகு ஐபிஎல் பிளே-ஆஃப் போட்டியில் ஒரு அணியை வழிநடத்து 40 வயதை கடந்த கேப்டனாகி உள்ளார் தோனி. 

துபாய் மைதானத்தில் இலக்கை விரட்டும் அணிகளே பெரும்பாலும் போட்டியை வென்றுள்ளன. அதனால் இந்த போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளனர்.