நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கேரள மாநிலம் கொச்சியில் கோலாகலமாகத் தொடங்கியது.
நான்காவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து திருவிழா கொச்சியில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் அட்லெடிகோ டி கொல்கத்தா, சென்னையின் எப்.சி., டெல்லி டைனமோஸ், கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி எப்.சி., புனே சிட்டி எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி., கோவா எப்.சி., பெங்களூரு எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
இந்த போட்டியின் தொடக்க விழா கொச்சியில் நேற்று நடந்தது. பாலிவுட் நடிகர் சல்மான் கான், நடிகை கேத்ரினா கைப் ஆகியோர் நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளர் சச்சின் டெண்டுல்கர், பிரபல நடிகர் மம்முட்டி ஆகியோர் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் ஐஎஸ்எல் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் நீட்டா அம்பானியிடம் மும்முட்டி கால்பந்தை வழங்க முறைப்படி போட்டி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் எந்த அணியும் கோல் அடிக்காததால் போட்டி சமனில் முடிந்தது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கவுகாத்தியில் இன்று நடைபெறும் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.