பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் மகள், குழந்தை ஒன்றை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை தோனியின் மனைவி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து அந்த குழந்தை யாருடையது? என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
தோனியின் 5 வயது மகளான ஷிவா, தனது கைகளில் குழந்தையை வைத்திருப்பது போன்ற படங்களை, தோனியின் மனைவி ஷாக்சி பகிர்ந்ததுதான் தெரியும். உடனடியாக அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக தொடங்கி விட்டது. பலரும் இந்த புகைப்படத்தை கொண்டாடி லைக் இட்டு வருகின்றனர். கையில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தையா, இல்லை பெண் குழந்தையா எனவும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனிடையே இந்த குழந்தை ஹர்திக் பாண்டியாவின் குழந்தையாக இருக்குமோ என்று சிலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.