விளையாட்டு

RCB vs KKR : டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு

EllusamyKarthik

அபுதாபியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நடப்பு ஐபிஎல் சீசனில் 31-வது லீக் ஆட்டத்தில் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் கோலி, பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 

கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலால் கடந்த மே மாதம் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2021 சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகி உள்ளது. இந்த இரண்டாவது பாதி சீசனின் முதல் ஆட்டத்தில் மும்பை மற்றும் சென்னை அணிகள் விளையாடின.  

இதற்கு முன்னதாக ஐபிஎல் களத்தில் இரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணி 15 முறையும், பெங்களூர் அணி 13 முறையையும் வெற்றி பெற்றுள்ளன. 

புள்ளிப்பட்டியலில் பெங்களூர் அணி மூன்றாவது இடத்திலும், கொல்கத்தா அணி ஏழாவது இடத்திலும் உள்ளன. 

கோலி இந்த சீசனுடன் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக உள்ளார். அதனால் அந்த அணியை முதல் முறையாக ஐபிஎல் களத்தில் சாம்பியனாக்கும் நோக்கத்துடன் அவர் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.