துபாயில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்ததை அடுத்து சூப்பர் ஓவரில் வென்றது பெங்களூரு.
முதலில் பேட் செய்த பெங்களூரு மூன்று விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது. அந்த இலக்கை விரட்டிய மும்பை இருபது ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை குவித்து ஆட்டத்தை சமனில் முடித்தது.
ஐபிஎல் போட்டிகளில் சமனில் முடியும் ஆட்டங்களின் முடிவு சூப்பர் ஓவரில் முடிவில் செய்யப்படும். அதன்படி இரண்டாவதாக பேட் செய்த மும்பை அணி சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்தது. பொல்லார்டும், பாண்டியாவும் பேட்டிங் செய்தனர். ஆறு ரன்கள் எடுத்த நிலையில் பொல்லார்ட் அவுட்டாக கேப்டன் ரோகித் ஷர்மா களம் இறங்கினார். முடிவில் ஆறு பந்துகளில் 7 ரன்களை குவித்தது மும்பை. அந்த ஓவரை நவ்தீப் ஷைனி வீசியிருந்தார்.
தொடர்ந்து சூப்பர் ஓவரில் பெங்களூரு சார்பில் கோலியும், டிவில்லியர்ஸும் களம் இறங்கினர். அந்த ஓவரை பும்ரா வீச ஆறு பந்துகளில் 11 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது பெங்களூரு .