கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி வரும் முன்களப் பணியாளர்களை கௌரவப்படுத்தும் வண்ணம் விதமாக ‘நீல நிற ஜெர்ஸி’யில் மீதமுள்ள போட்டியிகளில் விளையாடுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
ஆர்சிபி வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் விளாசும் ஒவ்வொரு சிக்ஸர், பவுண்டரி, எடுக்கும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் ஸ்பான்ஸர்கள் அளிக்கும் நன்கொடை முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அமீரகத்தில் தற்போது கொல்கத்தா அணியுடன் விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் கேப்டன் விராட் கோலி 4 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அந்த அணி 4 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது.
இதையும் படிக்கலாம் : ‘இந்த ஸ்பார்க் போதுமா..!’ - விமர்சனங்களை தவிடுபொடியாக்கிய ருதுராஜ் கெய்க்வாட்.. யார் இவர்?