விளையாட்டு

பெங்களூர் அணி வெற்றி பெற 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி!

EllusamyKarthik

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. 

டெல்லி அணிக்காக தவான் மற்றும் பிருத்வி ஷா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் இணைந்து 88 ரன்களுக்கு முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தவான் 43 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து பிருத்வி ஷா 43 ரன்களில் அவுட்டானார். பின்னர் களத்திற்கு வந்த அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 10 ரன்களில் வெளியேறினார். 

அடுத்தடுத்து மூன்று ஓவர்களில் அவர்கள் மூவரது விக்கெட்டுகளை கைப்பற்றியது பெங்களூர். அதன் மூலம் ஆட்டத்தை தங்கள் பக்கமாக திருப்பியது. சாஹல், ஹர்ஷல் பட்டேல், டேன் கிறிஸ்டியன், சிராஜ் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 

ஷ்ரேயஸ் ஐயர் 18 ரன்களில் சிராஜ் வீசிய பந்தில் அவுட்டானார். முதல் இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஹெட்மயர் 29 ரன்களில் அவுட்டானார். 

இருபது ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதை பெங்களூர் அணி விரட்டுகிறது.