விளையாட்டு

டோக்கியோ பாராலிம்பிக் வில்வித்தைப் போட்டி - காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ராகேஷ் குமார்

Sinekadhara

டோக்கியோ பாராலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் ராகேஷ் குமார் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

காம்பவுண்ட் பிரிவில் நடந்த இரண்டாவது சுற்றுப் போட்டியில் ஹாங்காங் வீரர் சென் நகாய் உடன் ராகேஷ் குமார் பலப்பரீட்சை நடத்தினார். சிறப்பாக செயல்பட்ட ராகேஷ், 144க்கு - 131 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை வசமாக்கினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்லோவாக்கியாவின் Marian Marecak-யை எதிர்கொள்கிறார். மற்றொரு இந்திய வீரரான ஷ்யாம் சுந்தர், இரண்டாவது சுற்றில் போராடி தோல்வியடைந்தார்.