விளையாட்டு

மழையால் கைவிடப்பட்டது, முதல் ஒரு நாள் போட்டி

மழையால் கைவிடப்பட்டது, முதல் ஒரு நாள் போட்டி

webteam

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டடது. 

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து ஒரு நாள் போட்டியில் பங்கேற்றுள்ளது. முதல் ஒரு நாள் போட்டி, கயானாவில் நேற்று நடைபெற்றது. 

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். மழையால் போட்டி 34 ஓவர்கள் கொண்டதாகக் குறைக்கப்பட்டிருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்லும் லெவிஸும் களமிறங்கினர். கிறிஸ் கெய்ல் 4 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் லெவிஸூடன் ஷாய் ஹோப் இணைந்தார். அந்த அணி, 13 ஓவர்களில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்தபோது மழை மீண்டும் குறுக்கிட்டது.  அப்போது லெவிஸ் 40 ரன்களுடனும், ஷாய் ஹோப் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

தொடர்ந்து மழை நீடித்ததால் போட்டியை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இரு அணிகள் இடையிலான இரண்டா வது ஒருநாள் போட்டி ஸ்போர்ட் ஆப் ஸ்பெயினில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.