விளையாட்டு

சுவிட்சர்லாந்து பேட்மிண்டன் ஓபன்: இந்தியாவின் சிந்து காலிறுதிக்கு தகுதி!

jagadeesh

சுவிட்சர்லாந்து பேட்மிண்டன் ஓபன் போட்டியில் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து தகுதிப்பெற்றுள்ளார்.

சுவிட்சர்லாந்து  சர்வதேச பேட்மிண்டன் ஓபன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 21-13, 21-14 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் அரிஸ் வாங்கை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-10, 14-21, 21-14 என்ற செட் கணக்கில் தாமஸ் பிரான்ஸின் ரோக்சலை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதேபோல இந்திய வீரர்கள் சாய் பிரனீத், அஜய் ஜெயராம் ஆகியோரும் அடுத்த சுற்றை எட்டினர். முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது சுற்றில் இந்திய முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் 16-21, 21-17, 21-23 என்ற செட் கணக்கில் போராடி தாய்லாந்தின் பிட்டயாபோர்ன் சவானிடம் தோல்வியடைந்தார்.