விளையாட்டு

தமிழிசை சவுந்தரராஜனிடம் வாழ்த்து பெற்றார் பி.வி.சிந்து

நிவேதா ஜெகராஜா

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்து, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ராஜ்பவனில், தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்த பி.வி.சிந்து வெண்கலப் பதக்கத்தை காண்பித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். பின்னர் பி.வி.சிந்துவுக்கு தமிழிசை பூங்கொத்துடன் பரிசு வழங்கினார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார்.