விளையாட்டு

சென்னையில் புரோ கபடி லீக் தொடர்: சச்சின், ஓபிஎஸ் பங்கேற்பு

webteam

சென்னையில் நடைபெறும் புரோ கபடி லீக் தொடக்க விழா நிகழ்ச்சியில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

புரோ கபடி லீக் போட்டிகளின் தொடக்க விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். நாளை தொடங்கி வரும் ஐந்தாம் தேதி வரை சென்னையில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 6 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி விளையாடுகிறது. புரோ லீக் தொடரில் அண்மையில் நடந்த போட்டியில் குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி த்ரில் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது