விளையாட்டு

சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய தமிழ் தலைவாஸ்

webteam

புரோ கபடி தொடரில் புனே அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை சந்தித்தது.

சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி ஒரு புள்ளி முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாம் பாதியில் புனேவின் புனேரி பால்டன் அணி வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முடிவில் 33-20 ‌என்ற புள்ளிகள் கணக்கில் புனே அணி வெற்றியை வசமாக்கியது. சொந்த‌ மண்ணில் நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது‌ ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது. துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், ‌தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர், போட்டியை நேரில் பார்த்து ரசித்தனர்.