விளையாட்டு

ஆன்லைன் செஸ் போட்டி: இந்தியா அரையிறுதிக்கு தகுதி

webteam

சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஆன்லைன் செஸ் போட்டியில் இந்தியா அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளது

சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஆன்லைன் செஸ் போட்டிகளை ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 30வரை நடத்தி வருகிறது. இதில் இந்தியா சார்பாக விளையாடிய சென்னை சிறுவன் பிரக்னாநந்தா(15) வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இவர் சீனாவின் லியூயானை தோற்கடித்தார்.

20 வயதுக்கு உட்பட்டோருக்கான Pool 'A'பிரிவில் இந்தியாவின் பிரக்னாநந்தா, திவ்யா தேஷ்முக் ஆகியோர் 4 ட்ரா மற்றும் 2 வெற்றி என்ற கணக்கில் இந்தியாவை வெற்றி பெறச் செய்துள்ளனர். இந்நிலையில் இந்தியா ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் அரையிறுதியில் இந்தியா விளையாட உள்ளது.