விளையாட்டு

கெயில், ராகுல், பூரான் சொதப்பல்; மார்க்ரம் -ஹூடா ஜோடி நிதானம் - மும்பைக்கு 136 ரன் இலக்கு

EllusamyKarthik

அபுதாபியில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனின் 42-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இருபது ஓவர்கள் விளையாடி 135 ரன்களை எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் மும்பை அணி டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. 

அந்த அணிக்காக தொடக்க வீரர்களாக மந்தீப் சிங் மற்றும் கே.எல்.ராகுல் களம் இறங்கினர். அதில் மந்தீப் 14 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து கெயில், ராகுல், பூரன் என மூவரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.

மார்க்ரம், தீபக் ஹூடாவுடன் இணைந்து 61 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். மார்க்ரம் 29 பந்துகளில் 42 ரன்களை குவித்து வெளியேறினார். ஹூடாவும் 28 ரன்களில் வெளியேறினார். 

பொல்லார்ட், பும்ரா, குர்ணால் பாண்ட்யா, ராகுல் சஹார் மாதிரியான பவுலர்கள் மும்பை அணிக்காக விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். மும்பை அணி 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டுகிறது. 

இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளன. வெற்றி பெற்றால்தான் அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும்.