விளையாட்டு

தேசிய கீதத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு: முதல் போட்டியிலேயே சர்ச்சையில் சிக்கிய வீரர்

webteam

இங்கிலாந்து அணியுடனான டி20 போட்டிக்கு முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, இந்திய‌ வீரர் பர்வேஸ் ரசூல் சூயிங்கம் மென்று கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய கீதத்தை பாடாமல், அவர் சூயிங்கம்மை சுவைத்துக் கொண்டிருந்ததை தொலைக்காட்சியில் கண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 27 வயதாகும் பர்வேஸ் ரசூல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர். இங்கிலாந்து அணியுடனான போட்டியே அவரது முதல் சர்வதேச ட்வெண்டி ட்வெண்டி போட்டியாகும்.