விளையாட்டு

டெஸ்ட் டீமில் இருந்து விடுவிக்கப்பட்ட ரிஷாப், டெல்லி அணியில் இணைந்தார்

webteam

இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் முறையே, டெல்லி, பஞ்சாப் அணியில் இணைந்தனர்.

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், சுப்மான் கில் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் அவர்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 

இதையடுத்து தற்போது நடந்து வரும் சையத் முஸ்டாக் அலி கோப்பைக்கான டி-20 தொடரில், டெல்லி அணியில் ரிஷாப் பன்ட்டும், பஞ்சாப் அணியில் சுப்மான் கில்லும் இணைந்தனர். 

விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவுக்கு காயம் ஏற்பட்டால் உடனடியாக களமிறங்க ஆந்திராவை சேர்ந்த விக்கெட் கீப்பர் கே.எஸ். பரத் சேர்க்கப்பட்டுள்ளார்.