விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு இங்கிலாந்தில் இவ்வளவுதானா சப்போர்ட் ? - கலாய்த்த மைக்கேல் வாகன்

webteam

இன்றைய போட்டியில் மைதானத்தில் குறைந்த அளவிலே ஆஸ்திரேலிய ரசிகர்கள் உள்ளனர் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ட்வீட் செய்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் இன்று லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிவருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் ஷர்மா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் மைதானத்திலுள்ள ஆஸ்திரேலிய ரசிகர்கள் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியையும் சேர்த்து வெறும் 33 ஆஸ்திரேலிய ஆதரவாளர்களே உள்ளனர்” எனப் பதிவிட்டுள்ளனர். இதற்கு இந்திய ரசிகர்கள் கலாய்த்து ட்வீட் செய்து வருகின்றனர். 

சற்று முன் வரை இந்திய அணி  11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி  44 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது. ரோகித் ஷர்மா 13 ரன்களுடனும், ஷிகார் தவான் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.