விளையாட்டு

கால்பந்து ஜாம்பாவான் மரடோனாவின் முதலாமாண்டு நினைவு நாள்: உறவினர்கள், ரசிகர்கள் அஞ்சலி

JustinDurai
கால்பந்து ஜாம்பாவான் மரடோனாவின் முதலாண்டு நினைவுத் தினத்தையொட்டி, அவரது உறவினர்கள் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டிருந்த அர்ஜெண்டினாவின் மரடோனா, கடந்த ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். பியூனஸ் அயர்ஸில் உள்ள மரடோனாவின் கல்லறையில், அவரது எட்டு வயது மகன் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினார். இதேபோல, அர்ஜெண்டினாவின் பல இடங்களில், அவரது ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். மரடோனாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்ற புகாரில் 7 மருத்துவ அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.