விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்

EllusamyKarthik

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச், கிரீஸ் வீரர் சிட்சிபாஸை வீழ்த்தினார். 

மிகுந்த எதிர்பார்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இரண்டு செட்களை சிட்சிபாஸிடம் பறிகொடுத்தார் ஜோகோவிச். அடுத்த மூன்று செட்களை 6 - 3, 6 - 2, 6 - 4 என கைபற்றி ஜோகோவிச் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார். இது அவர் வென்றுள்ள 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். 

இது பிரெஞ்ச் ஓபன் தொடரில் அவர் வென்றுள்ள இரண்டாவது பட்டமாகும்.