விளையாட்டு

"டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கப்போவதில்லை" - செரினா வில்லியம்ஸ்

jagadeesh

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என்று முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிக்கு முன்னதாக லண்டனில் செய்தியாளர்களிடம் பேசியபோது இவர் இதனை தெரிவித்தார். பல்வேறு காரணங்களால் இந்த முடிவை எடுத்திருப்பதாக செரினா கூறினார். 39 வயதான செரினா வில்லியம்ஸ், ஒலிம்பிக்கில் 4 தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளார். முன்னணி டென்னிஸ் வீரர் ரஃபேல் நடாலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.