விளையாட்டு

பந்தை சேதப்படுத்திய புகார்: வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு திடீர் தடை!

webteam

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரனுக்கு நான்கு டி-20 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் நிக்கோலஸ் பூரன். இவர் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ்- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடரில் பங்கேற்றிருந்தார். கடந்த திங்கட்கிழமை நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதாக இவர் மீது புகார் எழுந்தது. 

இதுபற்றி கள நடுவர்கள் பிஸ்மில்லா ஷின்வாரி, அகமது துரானி ஆகியோர் மூன்றாவது நடுவர் அகமது பக்தீனிடம் புகார் தெரிவித்தனர். விசாரணையில் தனது தவறை ஒப்புக்கொண்டார், பூரன். இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், நான்கு டி-20 போட்டிகளில் விளையாட அவருக்குத் தடை விதித்துள்ளது.

’இதற்காக எனது சக வீரர்களிடமும் ஆதரவாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார் பூரன்.