விளையாட்டு

பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஹைதராபாத் .. கலைந்தது கொல்கத்தா கனவு !

EllusamyKarthik

 ஷார்ஜாவில் நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின.

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து மும்பை அணி பேட்டிங் செய்தது. 

20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்தது மும்பை. 

தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணிக்காக டேவிட் வார்னரும், சாஹாவும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். 

இருவரும் விக்கெட்டை இழக்காமல் மும்பை பவுலர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். 

வார்னர் 85 ரன்களும், சாஹா 58 ரன்களும் எடுத்தனர். 

17.1 ஓவர்கள் முடிவில் 151 ரன்களை எடுத்து மும்பையை பத்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஹைதராபாத்.