விளையாட்டு

பத்மஸ்ரீ விருது தமிழகத்துக்கு கிடைத்த விருது... மாரியப்பன் நெகிழ்ச்சி

webteam

பத்மஸ்ரீ விருது தமிழகத்திற்கு கிடைத்த விருது என பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பனுக்கு இந்தாண்டுக்கான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் 68 வது குடியரசு தின விழாவில் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி இந்த விருதினை அளிக்கிறார்.

பத்மஸ்ரீ விருது அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், தனக்கு கிடைத்துள்ள விருது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது தமிழகத்திற்கு கிடைத்த விருதாக தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு இது ஊக்கமளிக்கும் என்றும் அவர்களும் பல்வேறு சாதனைகள் புரிந்து இது போன்று விருதுகளை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் மாரியப்பன் கூறினார். தனக்கு உதவியாக இருந்த குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.