விளையாட்டு

ஒலிம்பிக்: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தோல்வி

jagadeesh

டோக்யோ ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் மனு பாக்கர், யஷஸ்வினி தேஸ்வால் இறுதி சுற்றுக்கு முன்னேறாமல் ஏமாற்றமளித்தனர்.

இறுதி சுற்றுக்கு முன்னேற 10 புள்ளிகள் பெற்றால் முன்னேறலாம் என்ற சூழலில் 8 புள்ளிகளை மட்டுமே பெற்றதால் தோல்வியடைந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரு வீராங்கனைகளும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிப் போட்டிக்கு செல்லாததால் இந்திய வீராங்கனைகளின் துப்பாக்கி சுடுதலில் பதக்க கனவு தகர்ந்து போனது.