விளையாட்டு

பார்சிலோனா கால்பந்து அணியிலிருந்து விலக மெஸ்ஸி முடிவு !

பார்சிலோனா கால்பந்து அணியிலிருந்து விலக மெஸ்ஸி முடிவு !

jagadeesh

உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரரான லியோனல் மெஸ்ஸி தான் விளையாடும் பார்சிலோனா கிளப் அணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அர்ஜெண்ட்டினா நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனான லியோனல் மெஸ்ஸி கடந்த 20 ஆண்டுகளாக பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இப்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டியில் பெய்ரன் முனிச் அணியுடன் 8-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா தோல்வியடைந்தது. இந்தத் தோல்வி மெஸ்ஸியை பெரிதும் பாதித்ததாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக பார்சிலோனா அணி நிர்வாகத்துக்கு மெஸ்ஸி கடிதம் எழுதியுள்ளார். அதில் அணியிலிருந்து விலக விரும்புவதாக தெரிவித்துள்ளார். 2007க்கு பின்பு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பார்சிலோனா அணி இம்முறை படுதோல்வியை சந்தித்துள்ளது. ஆனால் இதே மெஸ்ஸியின் ஆட்டத்தால் பார்சிலோனா அணி 10 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது.