விளையாட்டு

கால்பந்து வீரர்களை வரவேற்றுள்ள மம்தா பானர்ஜி

webteam

ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட கொல்கத்தா வந்துள்ள வீரர்களை முதலமைச்சர் மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார். 

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், வீரர்கள், அணிகளின் பிரதிநிதிகள் மற்றும் போட்டி அமைப்பாளர்களை உளமார வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நாளை மாலை நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து - சிலி அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தை மம்தா பானர்ஜி மற்றும் சில மூத்த அமைச்சர்கள் காண வாய்ப்பிருப்பதாக மேற்கு வங்க அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.