விளையாட்டு

ராஜஸ்தானுக்கு எதிராக 171 ரன்கள் குவித்தது கொல்கத்தா! பிளே-ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா?

EllusamyKarthik

நடப்பு ஐபிஎல் சீசனின் 54-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசியது. 

கொல்கத்தாவுக்காக கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் 79 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஓவருக்கு 7 ரன்களுக்கு மேல் இருவரும் சேர்த்திருந்தனர். வெங்கடேஷ், 38 ரன்களில் அவுட்டானார். 

தொடர்ந்து வந்த ராணா 12 ரன்களிலும், திரிபாதி 21 ரன்களிலும் வெளியேறினர். கில் 56 ரன்கள் எடுத்திருந்தார். இருபது ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது கொல்கத்தா. 

ராஜஸ்தான் அணிக்காக சேட்டன் சக்காரியா, கிறிஸ் மோரிஸ், தெவாட்டியா மற்றும் பிலிப்ஸ் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ராஜஸ்தான் விரட்டுகிறது.