விளையாட்டு

விளையாட்டு வீரர்களுக்கு கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கி கவுரவிப்பு

Veeramani

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

டெல்லியில் நடைபெற்ற விழாவில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஸ், மல்யுத்தவீரர் ரவிகுமார், கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் உள்ளிட்ட 12 பேருக்கு மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், ஹாக்கி வீராங்கனை மோனிக்கா, கபடி வீரர் சந்தீப் நர்வால், மல்யுத்த வீரர் தீபக் பூனியா உள்ளிட்ட 35 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் சுப்பிரமணியன் ராமனுக்கு, சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது வழங்கப்பட்டது.