விளையாட்டு

மாரியப்பன், ரோகித் ஷர்மாவுக்கு கேல் ரத்னா விருது

webteam

தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன், கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’, ‘அர்ஜூனா’ உள்ளிட்ட விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 500க்கும் வீரர்கள் பட்டியல் பரிந்துரை செய்யப்பட்டது.

கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா, மாற்றுத் திறனாளி தடகள வீரரான 25 வயது மாரியப்பன் உள்ளிட்டோரின் பெயர்களும் அதில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் ரோகித் ஷர்மா மற்றும் மாரியப்பன் ஆகிய இருவருக்குமே கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.