விளையாட்டு

மும்பை அணியில் இருந்து ஜான்டி ரோட்ஸ் விலகல்

webteam

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ் பதவி விலகினார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்தவர் ஜான்டி ரோட்ஸ். தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக அந்த பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். ரோட்ஸின் இந்த முடிவால் மும்பை  இந்தியன்ஸ் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். ரோட்ஸ்க்கு இந்தியா மீதுள்ள காதலால் தனது மகளுக்கு இந்தியா என பெயர் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து மும்பை அணி நிர்வாகம்  கூறுகையில், ஜான்டி ரோட்ஸ் மும்பை அணிக்கு ஆற்றிய பணி அளப்பறியது. மும்பை அணியின் தூணாக விளங்கியவர்
ரோட்ஸ். அவரது பங்களிப்பை வார்த்தைகளால் கூற முடியாது. அவரது முடிவிற்கு மதிப்பளிக்கிறோம்.அவருக்கு சிறந்த எதிர்காலம் அமைய வாழத்துகிறோம்
என கூறப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக நியூசிலாந்தை சேர்ந்த ஜேம்ஸ் பெம்மன்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து ஜேம்ஸ்
தெரிவிக்கையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது. இது மிகப்பெரிய பணி . ஜான்டி ரோட்ஸ் விட்டுச்சென்ற இடத்தை நிரப்புவது
எளிதானதல்ல என கூறியுள்ளார்.