விளையாட்டு

'அந்த அரபிக் கடலோரம்...'-ஹர்பஜன் சிங் பாணியில் ஜடேஜா தமிழில் ட்வீட்..!

JustinDurai

ஹர்பஜன் சிங் பாணியில் ஜடேஜா தமிழில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

செப்டம்பர் 19-ம் தேதி அபுதாபியில் தொடங்கும் முதல் ஐபிஎல் போட்டியில், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணி மற்றும் மாலை 7.30 மணிக்கு போட்டி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சி.எஸ்.கே. அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா ஹர்பஜன் சிங் பாணியில் தமிழில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், ''அந்த அரபிக் கடலோரம்...அந்த நாள் ஞாபகம்... 2020 - களத்தில் சந்திப்போம்! #விசில்போடு

.Throwback to IPL 2014 in the UAE.  Excited to get going this season.’’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் உடன் பவுலிங், பீல்டிங், பேட்டிங் செய்வது போன்ற மூன்று படங்களையும் ஜடேஜா வெளியிட்டுள்ளார்