விளையாட்டு

மைதானத்தில் ரசிகர்கள் ரகளை: சென்னை அணி நிர்வாகம் கண்டனம்

webteam

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின்போது மைதானத்தில் அத்துமீறி செயல்படும் ரசிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னையின் எப்.சி. அணி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது.   சென்னையின் எப்.சி மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இடையிலான போட்டி நேரு விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. இந்தப்போட்டியில் சென்னை அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்தப்போட்டியில் சென்னை அணி முன்னிலை பெற்றதால் உற்சாமடைந்த தமிழக ரசிகர்கள், எதிரணிக்கு ஆதரவு தெரிவித்த வடமாநில ரசிகர்கள் முன் சென்று ஆடிப்பாடினர். அவர்களை கேலி செய்யும் விதத்தில் சில தமிழக ரசிகர்கள் நடந்துகொண்டனர். இதுபோன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது என்ற சென்னையின் எப்.சி. அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.