விளையாட்டு

ஐபிஎல் மெகா ஏலத்தின்போது தொகுப்பாளர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

EllusamyKarthik

பெங்களூரு நகரில் நடைபெற்று வரும் ஐபிஎல் மெகா ஏலத்தை ஏலதாரர் ஹக் எட்மேட்ஸ் சிறப்பாக தொகுத்து நடத்தி வந்தார். அவர் அந்த பணியை கவனித்து வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2018 முதல் அவர் ஐபிஎல் ஏலத்தை முன்னின்று ஏலதாரராக நடத்தி வருகிறார்.

மிகவும் துடிப்புடன் அவர் தனது பணியை கவனித்து வந்தார். 36 ஆண்டுகளாக அவர் ஏலம் விடும் பணியை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.