விளையாட்டு

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் : செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை நடைபெறுகிறது

EllusamyKarthik

ஐபிஎல் 2021 சீசனின் எஞ்சியுள்ள ஆட்டங்கள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை போட்டிகள் நடைபெற உள்ளது. 

கொரோனா தொற்று பரவல் காரணமாக 29 போட்டிகள் நடைபெற்ற நிலையில் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது முதலே ஐபிஎல் 2021 சீசன் அமீரகத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது உறுதியாகி உள்ளது. 

செப்டம்பர் 19 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதுவரை நடைபெறுள்ள போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் டெல்லி, சென்னை, பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் டாப் நான்கு இடங்களை பிடித்துள்ளன.