விளையாட்டு

பஞ்சாப்புக்கு 158 ரன்கள் டார்கெட் செட் செய்த டெல்லி

EllusamyKarthik

துபாயில் நடைபெற்று வரும் பஞ்சாப் VS டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணி பஞ்சாப்புக்கு 158 ரன்களை டார்கெட் செட் செய்துள்ளது. 

முதல் நான்கு ஓவர்களிலேயே டெல்லி அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களை பஞ்சாப் அணி காலி செய்தது. 

அதற்கடுத்து களம் இறங்கிய டெல்லி அணியின்  கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும், பண்டும் நிதானமாக ஆடினர். அவர்கள் அவுட்டானதும் ஆறாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய ஸ்டாய்னிஸ் 21 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை அடித்து 53 ரன்களை குவித்தார். 

அதன் மூலம் டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை குவித்தது.

கடைசி ஓவரில் மட்டும் டெல்லி அணி 30 ரன்களை குவித்திருந்தது. 

பஞ்சாப் அணிக்காக ஷமி 3 விக்கெட், காட்ரெல் 2 விக்கெட் மற்றும் ரவி பிஷோனி 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.