விளையாட்டு

610 ரன்கள் குவித்த இந்திய அணி: 3-ம் நாள் முடிவில் இலங்கை ஸ்கோர் 21/1

610 ரன்கள் குவித்த இந்திய அணி: 3-ம் நாள் முடிவில் இலங்கை ஸ்கோர் 21/1

webteam

இந்தியா-இலங்கை டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில், இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 205 ரன்கள் எடுத்தது. முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. முரளி விஜய்யும், புஜாராவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முரளி விஜய், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 10வது சதத்தையும் புஜாரா 14வது சதத்தையும் அடித்தனர். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்தது. புஜாரா 121 ரன்களுடனும், கோலி 54 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று மூன்றாம் ஆட்டத்தில் புஜாரா 143 ரன்களில் அவுட் ஆக, அபாரமாக விளையாடிய விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். பின்னர் 213 ரன்களில் கோலி அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, சதம் அடித்தார். இதையடுத்து இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 610 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இதைத்தொடர்ந்து 2வது இன்னிங்கை தொடங்கிய இலங்கை அணி, 1 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.