விளையாட்டு

இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

webteam

ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி.

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கண்டியில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். பும்ராவின் பந்து வீச்சு வேகத்தில் இலங்கை அணி திணறியது. இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணியில் அதிகப்பட்சமாக லஹிரு திரிமன்னெ 80 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 45.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 124 ரன்களும், தோனி 67 ரன்களும் எடுத்துள்ளனர்.