விளையாட்டு

கோலியுடன் 'செல்ஃபி' - சிறைக்கு சென்ற நான்கு ரசிகர்கள்: நடந்தது என்ன?

EllusamyKarthik

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பெங்களூரு நகரில் அமைந்துள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இலங்கை அணி 447 ரன்கள் எடுத்தால் வெடிரை என்ற இமாலய இலக்கை விரட்டி வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் ஆசையில் அவரது ரசிகர்கள் நான்கு பேர் போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே களத்திற்குள் நுழைந்தனர். 

பலத்த பாதுகாப்பையும் கடந்து அவர்கள் களத்திற்குள் நுழைந்து கோலியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். கோலியும் மறுப்பு ஏதும் சொல்லலாமல் படம் எடுத்துக் கொண்டுள்ளார். பின்னர் அவர்களை காவல்துறையினர் வெளியேற்றியுள்ளனர். 

 

அத்துமீறி களத்திற்குள் நுழைந்தது மற்றும் பாதுகாப்பை மீறிய குற்றத்திற்காக அவர்கள் மீது வழக்கு பதிந்துள்ளது பெங்களூரு Cubbon பார்க் காவல் நிலையம். சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளது காவல்துறை.