விளையாட்டு

ஸ்ரேயஸ், ரிஷப் பன்ட் அபாரம்: இலங்கை வெற்றிப்பெற கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா

EllusamyKarthik

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பெங்களூரு நகரில் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் பெற்ற 143 ரன்கள் முன்னிலையையும் சேர்த்து இலங்கை அணிக்கு வலுவான இலக்கை நிர்ணயித்துள்ளது இந்தியா. இந்த போட்டியில் வெற்றி பெற இலங்கை 447 ரன்கள் எடுத்தாக வேண்டும். 

இந்தியா சார்பில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 67 ரன்களும், பண்ட் 50 ரன்களும் எடுத்திருந்தனர். 

இலங்கை அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் ஒரேயொரு முறை மட்டுமே 400 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இன்னும் மூன்று நாட்கள் எஞ்சியுள்ளது.