விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்தியாவின் சதீஷ் குமார் காலிறுதிக்கு தகுதி

jagadeesh

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் குத்துச்சண்டைக்கான 91 கிலோ எடைபிரிவில் இந்தியாவின் சதீஷ் குமார் வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் ஆடவருக்கான 91 கிலோ எடை பிரிவுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. அதில் இந்தியாவின் சதீஷ் குமார், ஜமைக்காவின் ரிக்கார்டோ பிரவுனை எதிர்கொண்டார். இதில் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் சதீஷ் குமார் அபார வெற்றிப் பெற்று காலிறுதிக்கு தகுதிப் பெற்றார்.